செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்‌‌

आदौ शारीरकार्थक्रममिह विशदं विंशतिर्वक्ति साग्रा
संक्षेपोऽसौ विभागं प्रतयति च ऋचां चारुपाठोपपन्नम् |
सम्यग्गीतानुबद्धं सकलमनुगतं सामशाखासहस्रं
संलक्ष्यं सामिधेयै: यजुरपि दशकै: भात्यथर्वा रसैश्च ||


ஆதௌ ஶாரீரகார்தக்ரமமிஹ விஶதம் விம்ஶதிர்வக்தி ஸாக்ரா
       
ஸங்க்ஷேபோsஸௌ விபாம் ப்ரதயதி ரு̆சாம் சாருபாடோபபந்நம் |
ஸம்யக்கீதாநுபத்ம் ஸகலமநுகதம் ஸாமஶாகாஸஹஸ்ரம்
       
ஸம்லக்ஷ்யம் ஸாமிதேயை: யஜுரபி ஶகை: பாத்யதர்வா ரஸைஶ்ச ||

இத்திருவாய்மொழியில் நுனியுட‌ன்கூடிய‌ முத‌ல் இருப‌து பாசுர‌ங் க‌ளும், அதாவ‌து ப‌த்தாம் ப‌த்தில் “சார்வே த‌வ‌நெறி” என்றார‌ம் பிக்கும் திருவாய்மொழி தொட‌க்க‌மாக‌ ஏழு திருவாய்மொழி க‌ளும் முத‌ல் இருப‌து பாசுர‌ங்க‌ளும் சாரீர‌கார்த்த‌ க்ர‌ம‌த்தைத் தெளிவாகக் கூறுகின்ற‌ன‌. அதாவ‌து நான்கு அத்யாய‌ங்க‌ளாய்ப் ப‌தினாறு பாத‌ங்க‌ளாய்ப் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கும் சாரீர‌க‌ சாஸ்திர‌த் தில் தத்துவ‌ ஹித‌ புருஷார்த்த‌ங்க‌ள் எந்த‌ க்ர‌ம‌த்தில் நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வோ, அதே க்ர‌ம‌த்தில் இங்கும் இந்த‌ தொண்ணூறு பாசுர‌ங்க‌ளும் ப்ர‌திபாதியா நிற்கும் என்ற‌ப‌டி.
ஆதெள‌. சாரீரகார்த்த க்ரமம் இஹ‌ விசதம் விம்சதி: வக்தி ஸாக்ரா
தத்துவ ஹித புருஷார்த்தம் எனப்படுகிற பரப்ரஹ்ம ஸ்வரூபாதி கள், அதை அடைவதற்கு உபாயம் அந்த ப்ரஹ்மத்தை அனுபவிப்பதாகிற பலன், இவ்வனைத்தையும் வ்யாஸ மஹர்ஷி 345 ஸூத்திரங்களில் நிரூபித்திருக்கிறார். வேதங்களுக்கு அடுத்த படியான ப்ரமாண‌மாக இஸ்ஸூத்திரங்கள் கருதப்படுகின்றன, ஹிந்து மதத்தைப் பரவச் செய்ய முன்வந்தவர்க‌ள் இந்த ஸூத்திரங்களுக்கு விஸ்தரமான வ்யாக்யானம் செய்திருக்கிறார் கள். நம்முடைய மதமாகிய விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ப்ரவர்த்தகராகிய எம்பெருமானாரும் ஸ்ரீபாஷ்யம் என்னும் க்ரந்தத்தில் இவற்றின் அர்த்தத்தை விவரித்துள்ளார். அதன் அவதாரிகா வாக்யத்திலிருந்து இந்த ஸூத்திரங்களுக்கு போதாயனர் மிகவும் பெரியதான வ்ருத்தி க்ரந்தம் என்னும் ஒரு வ்யாக்யானம் செய்திருப்பதாயும், (டங்க த்ரமிட குஹதேவ ப்ரப்ருதிகளான)  பூர்வாசார்யர்கள் சுருக்கமாக வ்யாக்யானமிட் டிருப்பதாயும், அவற்றைத் தழுவி ஸூத்திரங்களின் அக்ஷரங் களுக்கு அர்த்தம் தாம் எழுதியதாயும் எற்படுகிறது.
இந்த ஸ்ரீபாஷ்யத்தில் ஸூத்திரங்கள் பல அதிகரணங்களாக‌வும், பதினாறு பாதங்களாகவும் நாலு அத்யாயங்களாகவும் பிரிக்கப் பட்டிருக்கின்றன, அதிகரணங்கள் 158. ஒவ்வொரு பாதத்திலும் முறையே உள்ள அதிகரணங்கள் 11, 6, 10, 8-10, 8, 7, 8-6, 8, 28, 15- 11, 11, 5, 6 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. (அதிகர‌ண‌ ஸாராவளி - 16). இந்தப் பதினாறுபாதங்களுள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் அம்சத்தை ஸ்ங்க்ரஹித்து ஒரு சுலோகம் ஆசார்ய ஸார்வ பெளமனால் ஸ்ரீஅதிகரண ஸாராவளி யில் அருளிச்செய்யப்பட்டிருக்கிறது. அது பின்வ‌ருமாறு:-
स्रष्टा देही स्वनिष्ठे निरवधिमहिमापास्तवाधः श्रिताप्तः
खात्मादेरिन्द्रियादेरुचितजननकृत् संसृतौ तन्त्रवाही ।

निर्दोषत्वादिरम्यो बहुभजनपदं खार्हकर्मप्रसाद्यः
पापच्छिद्रह्मनाडीगतिकृदतिवहन् साम्यदइचात्र वेद्यः ।

(1) பகவானே சேதனா சேதனங்களின் ஸ்ருஷ்டி கர்த்தா (2) இவைகளைச் சரீரமாக உடையவன், (3) த‌ன‌க்கு வேறு ஆதாரம் இல்லாதவன், (4) எல்லையில்லாத மஹிமையையுடையவன், (5)இதற்கு ஒருவிதமான விரோதமும் சொல்லும் ப்ரமாண‌ங்கள் இல்லாதவன் (8) தன்னை அடைந்தவர்களுக்குத் தான் ஆப்தன், (7) ஆகாசம் ஜீவாத்மா இவைகளை அததற்குத் தக்கபடி ஸ்ருஷ்டி செய்பவன், (3) அப்படியே இந்திரியங்களை ஸ்ருஷ்டி செய்பவன், (9) ஸம்ஸாரத்தை நடத்துகிறவன், (10) தான் ஒருவித தோஷத்தினாலும் தொட‌ப்ப‌டாதவனாகையினால் போக்யமானவன், (11) அனேக விதமான பக்தியோகங்களுக்கு விஷயமாயிருப்பவன், {12} பக்தர் களினால் அவரவர்களுக்குத் தகுந்ததான வர்ணாச்ரம தர்மங் களினால் ப்ரீதியுடையவனாகச் செய்யப்படக் கூடியவன், (13} ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன், {14) ப்ரஹ்ம நாடி வழியாக நிர்யாண‌த்தைச் செய்துவைப்பவன், (15) ப‌ல‌வித‌ங்க‌ளான‌ ஸத்காரங்கள் செய்யப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தினால் மோக்ஷ‌த் திற்கு அழைத்துக் கொண்டு போகுமவன், (16) தன்னுடைய ஸாம்ய‌த்தைக் கொடுப்பவன், என்கிற அம்சங்கள் முறையே ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கின்றன. இதைத்தான் சாரீரகார்த்த க்ரமம் என்கிறது. சரீரத்தையுடையவன் சாரீரன், சேதனாசேதனங்களைத் தன‌க்கு சரீரமாகவுடையவன் ப‌கவனாகையினால் அவன் சாரீரன் என்னப்படுகிறான். அவனைப் பற்றிய சாஸ்திரம் சாரீரகம் என்றும், இந்த அர்த்தத்தை நிரூபிக்கும் க்ரமம் சாரீர‌கார்த்த‌ க்ரமம் என்றும் கூறப்படுகிறது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக