வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

நம்மாழ்வார் வைபவம்

கீழ் நிரூபிக்கப்பட்ட சாரீரகார்த்த க்ரமப்படியே இந்தத் திருவாய் மொழியாகிற ப்ரபந்தத்தில் இறுதியிலுள்ள ஏழு திருவாய்மொழிகளுடன் கூடிய முதல் இரண்டு திருவாய்மொழிகளிலும் தத்துவாதி நிரூபணம் விசதமாகச் செய்யப்படுகிறது என்றருளிச் செய்யப்பட்டதாயிற்று. வ்யாஸமஹர்ஷி பரப்ரஹ்ம ஸ்வரூபாதிகளை நிரூபிக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்துடன் ஸூத்திரங்களை வ‌குத்தார். ஆகையினால் அது ஒரு க்ரமமாக நடுவில் விச்சேதாதிகள் இல்லாமல் செய்யப்பட்டது,
ஆழ்வாரோ அப்படி ஒருவித ஸ‌ங்கல்பத்துடன் இப்ரபந்தத்தைச் செய்ய முன் வரவில்லை. ஸமஸ்த‌ கல்யாண குணாத்மகன் என்கிற ப்ரஸ்ஸித்தியையுடைய ப‌க‌வானால் க‌டாக்ஷிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ராய்  அவனை உள்ளபடியே அனுபவித்து, அவ்வனுபவ ஜநிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்த‌படியே பேசும் பாசுரங்களன்றோ இத்திருவாய்மொழி ! பகவ‌த்ஸ்வரூபாதி தத்துவ நிரூபணத்தின் பேதமிருக்கமுடியாதாகையினால், ஆழ்வாருடைய அனுபவ க்ர‌மமும் அந்த சாரீரகார்த்த க்ரமமும் ஒன்றாய்நின்றது.  பகவான் “ப‌த்துடை அடியவர்க்கு எளியவன்” என்கிற‌ ஆகாரத்தை அனுஸ‌ந்திக்கப் புக்கு, ஒரு குணத்திலிருந்து மற்றொரு குணத்திற்குத் தாண்டி, பகவானுடைய கல்யாண குணங்களைப் பலபடியாக அனுபவித்துப் பேசி, இறுதியில் அவனைக்கிட்டும் ப்ரகாரம் முதலியவற்றை நிரூபித்தாராகையினால் ' பத்துடையடியவர்'  முதல் (1-3) சார்வே த‌வ‌நெறி'க்கு முன் (--1,4) வேய் ம‌ருதோளிணை வ‌ரையில் கீதாசார்ய‌ன் ப்ர‌ஸ‌ங்காத் ஸ்வ‌ஸ்வ‌பாவ‌த்தை கீதையில் அருளிச் செய்தாற்போலே ஆழ்வாரும் ப்ர‌ஸ‌க்தானுப்ர‌ஸ‌க்த‌மாக‌ப் ப‌க‌வானுடைய‌ ப‌ல‌ குண‌ங்க‌ளை அனுப‌வித்த‌ ப்ர‌கார‌ம் ந‌டுவிலுள்ள‌ 91 திருவாய்மொழிக‌ளாய் இருக்கும்.
இங்கு சாரீரகஸூத்ரார்த்த க்ரமம் என்று நிரூபிக்காமல் சாரீரகார்த்த க்ரமம் ' என்று அருளிச் செய்திருப்பதினால் ஆழ்வார் ஸூத்திரங்களைப் பார்த்து அந்த க்ரமத்தைப் பின்பற்றித் தம் ப்ரபந் தத்தில் அவற்றை நிருபித்தருளவில்லை என்பதும், வேதங்கள் பகவானை ஒருவாறு ப்ரத்யக்ஷீகரித்து அவனுடைய ஸ்வரூபாதிகளை ப்ரதிபாதிக்கும் க்ரமம் ப்ரஹ்மஸூத்திரங்களில் எப்படி ஸங்க்ரஹிக்கப் பட்டதோ, ஆழ்வாரும் அப்படியே தாமே எம்பெருமானை ப்ரத்யக்ஷீகரித்த ப்ரகாரத்தை இந்த ப்ரபந்தத்தில் வெளியிட்டபடியினால் அதே க்ரமம் இதிலும் காணப்படுகிறது என்பதும் தெரிவிக்கப் பட்டதாயிற்று. விசதம் என்கிற பதத்தால் இப்படி ப்ரதிபாதிக்கும் விஷயத்தில் ஸூத்திரங்களை விட ஆழ்வாருடைய ப்ரபந்தம் மிகவும் தெளிவாக இருக்கும் என்பதும் காட்டப்படுகிறது. ஸூத்திரங்கள் வேதங்களுக்கு உபப்ரும்ஹண ஸ்தானத்தில் நிற்கும். ஆழ்வாருடைய பிரபந்தமோ வேதங்களைப் போல ஸ்வதந்திர ப்ரமாணமாய்  நிற்கும் என்று அறிய வேண்டும்.  எப்படிப் பதினாறு பாதங்களில் கூறப்படும் அர்த்த க்ரமம் நிரூபிக்கப்ப்ட்டிருக்கிறது என்பது மேலே விவரிக்கப் படுகிறது. பகவானுடைய ஸ்ருஷ்டி கர்த்ருத்வத்தை நிரூபிப்பதற்கு முன்பு, முதல் நாலு அதிகரணங்களில் (நாலு ஸூத்திரங்களில்) சாரீரக சாஸ்திரம் ஆரம்பணீயம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
        முதல் ஸூத்திரத்தில் ஸித்தபரமான உபநிஷத்வாக்யங்களுக்கு அர்த்தபோதகத்வம்  உண்டு என்கிற அர்த்தம் உபபாதிக்கப் பட்டது.  யவன் அவன்என்று அவனுடைய ப்ரஸித்தியைக் கூறிக் கொண்டு உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் யவன் மயர்வற மதிநலம் அருளினன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி, யவன் அய‌ர்வறும் அமரர்கள் அதிபதி, அவன் துய‌ர‌று சுட‌ர‌டி தொழுதுஎழு  என்ம‌னனேஎன்று ஸித்தபரங்களான உபநிஷத்து வாக்யங்களுக்கு அர்த்த போதகத்வத்தை வெளியிட்டருளினார்.. ஜன்மாத்யதிகரத்தில் நிரூபிக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயுக்தமான ஸர்வஜ்ஞத் வாதி கல்யாண குணங்களையுடையன் என்பது உயர்வற உயர் லமுடையவன் என்னப்பட்டது. உயர்வற உயர்நலம் உடையன் என்பதினால் வெளியாகும் இந்த ஏற்றத்தை சாஸ்திரம் கொண்டே தெளியவேண்டும் என்றேற்படுகிறபடியினால் சாஸ்த்ரயோநித்வாதி கரணார்த்த க்ரமம் கூறப்பட்டது. "மயர்வற மதிநலம் அருளினன்  என்று அவனைப் பற்றிய ஜ்ஞானம் புருஷார்த்தம் இவற்றை அளித்தவன் என்பதினால் ஸமந்வயாதிகரணார்த்த க்ரமம் நிரூபிக்கப்பட்டது.
ஸ்ரஷ்டா - பகவான் ஜகத்தை ஸ்ருஷ்டிப்பவன் என்றதினால் அப்படிச் செய்வதற்கு யோக்யதையில்லாத சேதனா சேதனங்களை விட அவன் வேறுபட்டவன் என்பது ஸூசிதம் என்று ஈக்ஷத்யாதி கரணம், ஆகாசாதிகரணம், ப்ராணாதிகரணம் ஜ்யோதிரதிகரணம் என்கிற அதிகரணங்களில் நிரூபிக்கப்பட்ட அசேதனங்களைவிட வேறுபட்டவன்என்பது  இங்கு பொறி உணர்வு அவையிலன்என்னப்பட்டது. ஆநந்த மயாதிகரணம் முதவியவைகளில் உபபாதிக்கப்பட்ட சேதனங்களை விட வேறுபட்டவன் என்பது, ‘மனனுணர் அளவிலன்என்னப்பட்டது.
இரண்டாவது பாதத்தில் கூறப்பட்ட பகவான் எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடையவன் என்பது தேஹீ" என்னப் பட்டது. இது இலனது உடையன் இது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன்; என்று மூன்றாம் பாட்டில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்வநிஷ்ட:’ என்று மூன்றாம் பாதத்திலும், நிரவதிமஹிமா  என்று நான்காம் பாதத்திலும் உபபாதிக்கப்பட்ட க்ரமத்தை அந்நலனுடை ஒருவனைஎன்கிற பாட்டில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக