ஞாயிறு, 20 மார்ச், 2011

ஊரெங்கும் நிறைந்த கோவிந்தா கோஷம்

DSC02582திருப்புல்லாணியில் இன்று ஸ்ரீ ஆதி ஜெகன்னாதப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருத்தேரில் புறப்பாடு கண்டருளினார். காலை 9.50க்கு இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் திரு மகேந்திரன் வடம் பிடித்து துவக்கி வைக்க, எம்பெருமான் உவந்து கேட்டுக் களிக்கின்ற பறை மேளம் முழங்க (ஒன்று தெரியுமோ! அந்தக் காலத்திலிருந்தே உத்ஸவாதிகளில் இந்தப் பறை மேளத்துக்கென முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, அவர்களுக்கு விசேஷ சம்பாவனைகளுக்கும் திட்டம் ஏற்படுத்தப் பட்டுள்ளது) தேர் நகர்ந்த ஓரிரு வினாடிகளிலேயே சென்ற வருடம் போலவே இந்த வருடமும் தேர் ஓடியது. வந்து கூடிய கூட்டத்திற்கு பிடிக்க வடத்தில் இடமில்லை. அளவு கடந்த உற்சாகத்தில், ஆனந்தப் பரவசத்தில் அவர்கள் எழுப்பிய கோவிந்த கோஷம் பெருமாளைக் குளிரச் செய்திருக்க வேண்டும். அதனாலேயே தேர் இழுப்பவர்களுக்கு எந்த சிரமமும் தெரியாமல் வடம்  பிடித்து இழுத்த களைப்பே தெரியாமல், சுட்டெரித்த வெயிலையே உணராமல் இழுத்தோம். இன்னும் சொல்லப் போனால் தேர் ஓட்டத்திற்கு இணையாக நாங்கள் ஓடுவதே ஒரு நேரத்தில் சவாலாக ஆயிற்று என்கிற அளவில் ஓட்டமோ ஓட்டம். சரியாக ஒரு மணி நேரத்தில் நிலைக்கு வந்து விட்டார். கூடி இழுத்த கூட்டம் மந்திரங்கள் தெரியாத கூட்டம். சாஸ்திரங்கள் அறியாத மக்கள். வேதங்களும், பிரபந்தங்களும் எம்பெருமானை ஏத்துகின்ற
DSC02577
வகையெல்லாம் முற்றிலும் அறியாத கிராமத்து ஜனங்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் தங்கள் உள்ளத்திலிருந்து மனத்திலிருந்து உள்ளன்போடு கோவிந்தா என்று அழைத்தால் போதும் என்பதுதான். அறிவால் அவர்கள் என்றும் பெருமாளை அணுகியதில்லை. புத்தியால் ஆராய்ச்சிகள் செய்ததில்லை.  கைங்கர்யங்கள் செய்கிறோமென்று அவர்கள் எந்தப் பட்டத்துக்கோ பலனுக்கோ ஆசையும் பட்டவர்களில்லை.  இன்னும் சொல்லப் போனால் வந்திருந்த கிராமத்து ஜனங்கள் பலருக்கு அன்றாடம் உழைத்தால்தான் அதன் மூலம் கூலி கிடைத்தால்தான் ஜீவனம். அதையும் துறந்து  இதயபூர்வமாகத் தன்னை நேசிக்கும் அவர்களுக்காகவே பெருமாள் மிகவும் இறங்கி வந்து அருள் புரிவான் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே இன்றைய தேரோட்டம் அமைந்தது. “உணர்வா ரின்பமாவானை” என்று கேசவ அய்யங்கார்  வர்ணிப்பாரே அப்படி அவர்கள் தங்கள் உணர்வால் உளம் உருகி எழ்ப்பிய கோவிந்தா DSC02572
கோஷங்களாலே மனம் மகிழ்ந்த மெருமாளையும், தேரோட்டத்தில் இறுதிப் பகுதியையும் (அடியேனும் தேரிழுத்ததாலே முதலிலிருந்தே முடியவில்லை), தேரிலிருந்து பெருமாள் ஆஸ்தானத்திற்கு காலையில் எழுந்தருளியமையும் இங்கு வீடியோக்களாகக் காணலாம்.
 






1 கருத்து:

  1. அறியாத கிராமத்து ஜனங்கள். அவர்கள் அறிந்ததெல்லாம் தங்கள் உள்ளத்திலிருந்து மனத்திலிருந்து உள்ளன்போடு கோவிந்தா என்று அழைத்தால் போதும் என்பதுதான். அறிவால் அவர்கள் என்றும் பெருமாளை அணுகியதில்லை. புத்தியால் ஆராய்ச்சிகள் செய்ததில்லை. கைங்கர்யங்கள் செய்கிறோமென்று அவர்கள் எந்தப் பட்டத்துக்கோ பலனுக்கோ ஆசையும் பட்டவர்களில்லை. இன்னும் சொல்லப் போனால் வந்திருந்த கிராமத்து ஜனங்கள் பலருக்கு அன்றாடம் உழைத்தால்தான் அதன் மூலம் கூலி கிடைத்தால்தான் ஜீவனம். அதையும் துறந்து இதயபூர்வமாகத் தன்னை நேசிக்கும் அவர்களுக்காகவே பெருமாள் மிகவும் இறங்கி வந்து அருள் புரிவான்:)


    தேரை பற்றி தாங்கள் கூறுவதை படிக்கும் பொது கண்கள் பனிக்கிறது .
    நாங்களும் அந்த கூட்டம்தானே அதனாலோ! கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

    இதே சமயத்தில் திருநின்றவூர் பக்தவத்சல பெருமாளுக்கும் தேரோட்டம் நடந்தது. அங்கேயும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி ஊரே ஆனந்தத்தில் மிதந்தது .

    பதிலளிநீக்கு