ஞாயிறு, 23 நவம்பர், 2008

ஸ்ரீவேதாந்த தேசிகவைபவப்ரகாசிகைகீர்த்தனைகள்

இராகம் புன்னாகவராளி தாளம் சாப்பு
கண்ணிகள்
களங்கமில்லாச்சத்தியாகாலமெனுமக்கிர
காரமிவராலேசிறந்தது -புகழ்
விளங்குமக்காலத்தி லட்சுமணாரியர்திரு
மேனியில்வைவர்ணியம்பிறந்தது

குமாரருமின்றி யிருந்திடவுங்கண்டு
கொண்டவர்தேவிகள் ஓலுவரே - எங்கும்
சமானமிலாத பாகவதாப
சாரமிதுவென்றுசொல்லுவரே

வேதாந்தாசாரியர் சன்னிதியினாஞ்சென்று
வேண்டியபசாரக்ஷாபணஞ் - செய்தால்
சாதாரணமாகவெல்லாநன்மையுந்
தாமுண்டாவென்றதேசோபனம்.

இங்கிதைக்கேட்கவந்த லட்சுமணாசாரியரு
மேற்றுக்கொண்டார்கிருபாவருஷரே - தவள
சங்கத்திருப்பல்லக்குமுதலாகிய
சம்பிரமுள் ளமாபுருஷரே.
தமதுவிருதெல்லாங்கோயிலிலேவைத்துத்
தாமுந்தேவிகளுமாகவே -- பாத
கமலநடையாகச்சத்தியகாலத்துக்கே
கண்ணனருள்பாடியேகவே.

சதிராகலட்சுமணசாரியரும்வேதாந்த
சாரியர்தமைத்தேடிநண்ணினா -- ரங்கே
எதிர்கொண்டுசாஷ்டாங்கமாகப்பிரணாமந்தா
னெங்கள்வேதாந்தாசாரியர்பண்ணினார்.

அங்கவர்தந்திருமாளிகையிலெழுந்
தருளச்செய்துபசரித்தனர் -- வேத
புங்கவர்லட்சுமணாசாரியார்வந்தவகை
பொருந்தவெல்லாமும்விரித்தனர்

தினந்தோறும்பாஷியவியாக்கியானமேகால
க்ஷேபமாகவேசாதித்து -- அதி
னனந்தரம்பிள்ளைஸ்ரீபாததீர்த்தத்தை
யங்கீகாரஞ்செய்துபோதித்து

தேவிகளுக்கும்பிரசாதித்திருக்வத்
திர்த்தத்தின்வைபவத்தாலே -- அவ
ராவியுடலுக்குமானந்தமாயொரு
ஆண்டுக்குள்ளாயுடன்மேலே

சேர்ந்துஇருந்திட்டரோகமுந்தீர்த்துடன்
தேவிகளுங்கர்ப்பந்தரிக்க -- மனங்
கூர்ந்தலட்சுமணாசாரியரும்மகிழ்ச்சி
கொண்டுமிகவுபசரிக்க

அத்புதவேதாந்தாசாரியார்தம்முடை
அநுமதிபெற்றுநீடி - நாளுங்
கற்புமிகுந்திடுந்தேவிகளுடனே
கலந்திருந்துகொண்டாடி

நாற்றிசைசொல்லுமரங்கந்தனைச்சேர
நல்லகுமாரரும்பிறக்க -- அந்தத்
தீர்த்தமகிமையால்வந்தபிள்ளைநாமந்
தீர்த்தப்பிள்ளானென்றுசிறக்க

பிரபலமாகுந்திருத்தந்தைபேருடன்
பிள்ளைக்கிசைந்திடும்பேர்கள் -- நலந்
தரவேயாயியாழ்வார்பிள்ளையென்றுகூட்டிச்
சாற்றினாரென்றுஞ்சொல்வார்கள்

ஏற்குந்தீர்த்தப்பிள்ளானாயியாழ்வார்பிள்ளான்
என்றேயிரண்டுபேர்தாங்கி -- இந்தப்
பார்க்குள்ளேலட்சுமணாசார்யர்குலந்தான்
கனைத்ததையாபுகழோங்கி

மண்டலமீதிலேயெங்கெங்கேதான்கவி
வாதிசிங்கர்க்கிணைதேசிகர் -- ஆருங்
கண்டதுண்டோசொல்லும்வெகுப்ரபந்தத்தைக்
காட்டியருள்செய்தார்பூசிகர்

பிள்ளையென்றால்தூப்புற்பிள்ளைமற்றப்
பிள்ளையெல்லாமணிற்பிள்ளையே - யென்று
தெள்ளுமொழியாகவெங்குஞ்சொல்லப்பைய
தீட்சிதரேவெள்ளையே
சாண்கட்டைமீதிலேயாயிரத்துவாரத்தைத்
தானிட்டவேதாந்தமூர்த்தியே -- இவரை
காண்கநினைக்கவேயெண்ணியதெல்லாந்தாம்
கைகூடுமென்பதுங்கீர்த்தியே.

கொச்சகக்கலிப்பா
பாயுநீர்பொன்னிசூழ்ந்த பதிசத்தியாகாலமென்னும்
மேயினவக்கிரகாரத் தேகாந்தமிசைந்தபிள்ளை
மாயிருஞாலத்தேயாழ் வார்கடாம்பதின்மர்பாடுங்
கோயிலினைப்பைநெஞ்சிற்கொண்டிட்டார்கண்டிட்டாரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக