வெள்ளி, 8 செப்டம்பர், 2006

திருப்புல்லாணி மாலை

         திருப்புல்லாணி மாலை      

 அறன் வலியுறுத்தல் (5வது குறள்)

பொன்னாட்டு இறையோடு அயிராணி போற்றும் அம்போருகப்பூ
மின்னாட்கு நாயகம் என்னும் புல்லாணியில் வீற்றிருக்கும்
அன்னார்க்கு அடியவர் சொல்வர் அழுக்காறுஅவாவெகுளி
இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
எனவே.

குறிப்பு:--  பொன்னாடு-- தேவலோகம்; அயிராணி-- இந்திராணி;
                   அம்போருகப்பூ--- தாமரை; மின்னாட்கு--திருமகளுடைய
                   நாயகம்-- தலைவன்;  

 
     இது வாஸ்து அல்ல 
   மத்ஸ்ய புராணம் கூறும் கட்டிடக் கலை விதிகள்
   (நன்றி:  திரு சோ அவர்கள், "துக்ளக்")
 கட்டிடக் கலையை வகுத்தவர்கள்:
    ப்ருகு, அத்ரி, வசிஷ்டர், விச்வகர்மா, மயன், நாரதர்,நக்னஜிதன், விசாலாக்ஷன்,
   புரந்தரன், ப்ரும்மதேவன், கார்த்திகேயன், நந்தீச்வரன், சௌனகர்,கர்கர், வாஸூ
   தேவன், அநிருத்தன், சுக்ரன், ப்ருஹஸ்பதி  ஆகியோர்.
  
   சித்திரையில் கட்டிடம் துவங்கினால் நோய்வாய்ப்படுவான்;
  வைகாசியில் தொடங்குபவன் செல்வத்தைப் பெறுவான்.
   ஆடியில் தொடங்குபவனுக்கு நிறைய வேலையாட்கள் கிடைப்பர்.
   மார்கழி  தானியத்தையும், மாசி செல்வத்தையும், பங்குனி நன்மக்கட்பேற்றையும் அளிக்கும்.
   ஆனி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, தை மாதங்கள் கட்டிட வேலை ஆரம்பிக்க உகந்த மாதங்கள் அல்ல.
 
  அச்வினி, ரோஹிணி, மூலம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷ நக்ஷத்திரங்கள் உகந்தவை.
  ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில்  கட்டிடம் கட்ட  ஆரம்பிக்கக்கூடாது."
  மீதி நாளைக்கு
 திருதிரு
 
  


              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக